(Published in Sep-Oct 2000 issue of IOBian)
Category Archives: Tamil
பின்ன எண் என்பது p/q, q!=0
(Published in Jan-Mar 2000 IOBian)
கடிதமா? வேண்டாம்!
(சிறுகதை – Published in October 1983 issue of IOBian)
பாஞ்சாலி-துரியோதனன்-பாண்டவர்கள்
(Published in December 1981 issue of IOBian)
வாழ்க்கை முயற்சி வழியா, விதி வழியா?
(Published in Jan-Mar 1998 issue of IOBian)
வஸந்த காலம் வருமோ? நிலை மாறுமோ?
லலிதா சீதாராமன் (2013ஆம் ஆண்டில் எழுதப்பட்டது) “கட்டுண்டோம், பொறுத்திருப்போம், காலம் வரும்” என்றுதான் எண்ணத் தோன்றுகிறது, நாளும் செய்தித் தாளில் வரும் செய்திகளைப் பார்க்கும் போது. ஒரு வேளை காலன் வரும் வரை பொறுத்திருக்க வேண்டும் என்பதைத்தான் காலம் என்று சொல்லி வைத்தார்களோ! இருக்கட்டும், நல்ல காலம் வரும் என்றே நம்புவோம். 2012ஆம் ஆண்டின் இறுதியில் புதுதில்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகாயப்படுத்தப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த இளம் பெண்ணின் நினைவுகளிலிருந்து மீள்வதற்குள்ளாகவே 2013 ஃபிப்ரவரியில் அடுத்தடுத்துContinue reading “வஸந்த காலம் வருமோ? நிலை மாறுமோ?”
ஸங்கீதமே!வைபோகமே!!
லலிதா சீதாராமன் (2012ஆம் ஆண்டில் எழுதப்பட்ட சிறுகதை) அக்ஷரா-ஸ்வரா கர்நாடக இசை பாடும் புகழ் பெற்ற சகோதரிகள். அவர்களது அண்ணனும் தம்பியும் முறையே வயலின் மற்றும் மிருதங்க வித்வான்கள். அவர்கள் நால்வரும் ஒருசேர மேடையேறிச் செய்யும் கச்சேரிகள் இசைப் பிரியர்களின் கண்ணுக்கும் காதுக்கும் மனதுக்கும் விருந்தாக அமையும். திருமணத்திற்குப் பிறகும் சகோதரிகளின் இசைக் கச்சேரிகள் தொடர வேண்டும் என்று விரும்பிய பெற்றோர் அதற்கேற்றவாறு அதிகக் கவனம் செலுத்தி மாப்பிள்ளைகளைத் தேடத் தொடங்கினர். அவர்களுக்குப் புகழ் பெற்ற திரைContinue reading “ஸங்கீதமே!வைபோகமே!!”
கூடாங்குளம்
லலிதா சீதாராமன் (2012ஆம் ஆண்டில் எழுதப்பட்டது) சங்கர் கூடாங்குளத்தில் ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளியில் பட்டதாரி ஆசிரியர். அவனது மனைவி கோமதி அங்கு ஒரு தனியார் வங்கியில் பணிபுரிகிறாள். சங்கர் பள்ளியில் படிக்கும் நாட்களிலிருந்தே அணு மின் உலை அந்த ஊரின் பேச்சுகளோடும் நினைவுகளோடும் கலந்திருந்த ஒரு பெயர். ரஷ்ய நாட்டின் தொழில் நுட்ப உதவியுடன் கட்டப் பட்டு வருகிறது. ஆனால் மார்ச் 2011ல் ஜப்பானில் நிகழ்ந்த பூகம்பமும் சுனாமியும் அவை அணு மின் உலைகளுக்கு ஏற்படுத்திய பேராபத்தும்Continue reading “கூடாங்குளம்”
கஜேந்திர மோட்சம்
லலிதா சீதாராமன் (2012ஆம் ஆண்டில் எழுதி 2020ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட சிறுகதை) முதலை வாயிலிருந்து காலை எடுக்க முடியாமல் “ஆதிமூலமே!” என்று கதறிய யானையை மஹாவிஷ்ணு கருடன் மீது பறந்தோடி வந்து காப்பாற்றினார் என்று தொலைக்காட்சியில் பாகவதர் உருக்கமாக வருணித்துக் கொண்டிருந்தார். கமலா மெய் மறந்து கேட்டுக் கொண்டிருந்தாள். “நாமெல்லாமும் ஸம்ஸாரம் என்னும் முதலை வாயில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நம்மைக் காப்பாற்றவும் கடவுள் வருகிறார். ஆனால் அவர் அப்போது சங்கு சக்கரம் தாங்கி கருடன் மீது வருவதில்லை.Continue reading “கஜேந்திர மோட்சம்”