மாற்றி யோசித்து ஒன்றாக முன்னேறுவோம்!

( 27.06.2019 அன்று எழுதப்பட்டது ) சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலுக்கு முன்,  தனியார் தொலைக்காட்சி ஒன்றில்,  சில தோழமைக் கட்சிகளின் கூட்டம் ஒளிபரப்பப் பட்டுக்கொண்டிருந்தது. அந் நிகழ்ச்சியின் முடிவில் சில பார்வையாளர்கள் திடீரென முன்னறிவிப்பின்றியும் காரணமேதுமன்றியும் குட்டப்பட்டது போல் உணர்ந்திருப்பார்கள்.  ஒரு அரசியல் தலைவர்  வீரவாள் என்ற சொல்லை  உபயோகப்படுத்திய மறு கணம் மற்றோர் தலைவர்  வீரவாள் என்று சொல்லி ‘அவாளை’ அழைத்துக் கொண்டு வந்துவிடாதீர்கள் என்றவுடன் மேடையில் ஆமோதிப்பாகச் சிரிப்பலைகள் கிளம்பின. பொதுப்பிரிவில் உள்ளContinue reading “மாற்றி யோசித்து ஒன்றாக முன்னேறுவோம்!”

கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்!

(08-02-2018 அன்று எழுதப்பட்டது) தன் தந்தத்தையே எழுதுகோலாக உபயோகித்த விநாயகர் மற்றும் தம் எழுத்துக்களால் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்திய சமயக்குறவர் நால்வர், ஆண்டாள், அருணகிரிநாதர் போன்ற பக்த கவிகள் ஆகியவர்களின் சந்நிதிகளில் நிற்கும்போது நான் அவர்களிடம் என் எழுத்துக் கனவுகளையும் முன்வைப்பதுண்டு. தற்போது ஒரு மாத காலமாக, ஆண்டாளும் அவளது படைப்புக்களான திருப்பாவையும்  நாச்சியார் திருமொழியும்   மீண்டும் மீண்டும் பேசப்பட, இலக்கியம், காவியம், ரஸம் முதலியவற்றைப் பற்றி என் உள்ளத்தில் கிளர்ந்தெழுந்த கருத்துக்கள் என்னை எழுதத் தூண்டின.Continue reading “கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்!”

நினைவுத் துணுக்குகள்

(2013ஆம் ஆண்டில் எழுதப்பட்டது) ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ திரைப்படத்தில் திரு கமல்ஹாஸனிடமும் அவரது நண்பர்களிடமும் வசமாக மாட்டிக் கொண்ட திரு கிரேஸி மோஹன் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து ‘ஷட் அப்!’ என்று சொல்ல ‘என்ன கெட்ட வார்த்தையெல்லாம் சொல்கிறாய்?’ என்று அவர்கள் அவர் மீது பாய்வார்கள். ‘ஷட் அப் என்பது கெட்ட வார்த்தை இல்லையே’ என்று கிரேஸி மோஹன் பயந்தும் வியந்தும் கூறியவுடன் கமலும் அவரது நண்பர்களும் ‘ஆமால்ல, அது கெட்ட வார்த்தை இல்லல்ல…’ என்று  ஒருவர்Continue reading “நினைவுத் துணுக்குகள்”

ஐம்பெருங் காப்பியங்களில் இந்துமதக் கருத்துக்கள்

(2000ஆம் ஆண்டு ஜனவரியில் எழுதப்பட்டது )